மக்கள் புரட்சிக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
அராஜகம் ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அராஜகம் ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சென்னையில் இன்று(வியாழக்கிழமை) நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வன்முறை ஒழிய வேண்டும் என்றால் மக்கள் புரட்சி வர வேண்டும். மக்கள் புரட்சி தானாக வரும்.அதை தூண்ட வேண்டிய அவசியம் கிடையாது. திமுகவும் அதை தூண்டாது.
பிரதமர் வாஜ்பாய் தமிழக அரசின் மீதான புகார்கள் நியாயமானதாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறியுள்ளார். அவர் கூறியது என்ன என்பது எனக்கு புரியவில்லை.
இனி மத்திய அரசிடம் எது குறித்தும் புகார் செய்ய மாட்டோம். ஆனால் மத்திய அரசுடனான திமுகவின் உறவுஎப்போதும் போல் தொடரும்.
இரண்டாம் கட்ட தேர்தலில் வன்முறை தொடர்ந்தால் எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழகதேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications