கொலையும்செய்வாள் பத்தினி
பட்டுக்கோட்டை:
குடும்பச் சண்டையில் தன்னை அடித்த கணவரை அரிவாளால் வெட்டிய மனைவி, கணவர் இறந்துவிடுவாரோஎன்ற அச்சத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி. ஆனால் கட்டிய கணவரையே கொலை செய்யத் துணிந்து,பின்னர் மனம் மாறி தனது உயிரையே மாய்த்துக் கொண்ட ஒரு சம்பவம் பட்டுக்கோட்டை அருகே நடந்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு,
பட்டுக்கோட்டையை அடுத்த அலிவலம் கிரமத்தைச் சேர்ந்தவர் சுப்பையன். விவசாயியான அவரது மனைவிமரகதம். இவர்கள் இருவருக்கிடையில் வாய்த்தகராறு எப்ட்டுள்ளது. பிறகு அதுமுற்றியதால் கோபம் கொண்டசுப்பையன் தன் மனைவியை அடித்துள்ளார்.
அடிவாங்கிய வெறியில் அருகில் இந்த அரிவாளை எடுத்து தன் கணவரின் முதுகில் ஓங்கி ஒரு வெட்டுவெட்டியுள்ளார் மரகதம். ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்த சுப்பையனை அருகில் இருந்தவர்கள்மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தனது கணவர் இறந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இருந்த மரகதம்,தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டு உத்தரத்தில் சேலையால் தூக்குப் போட்டு மரகதம்தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவமனையில் காயத்திற்கு மருந்து கட்டிக் கொண்டு வந்த சுப்பையன் தன் மனைவி தற்கொலைசெய்துகொண்டதை அறிந்து கதறி அழுதார்.
இதுகுறித்து வாட்டாத்திக் கோட்டைப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.