For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரியில் வாக்காளர்களை மிரட்டிய அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் அவரது ஆதரவாளர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்களை மிரட்டியதாக மத்திய விளையாட்டுத்துறைஇணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு குறித்து அவர் கூறுகையில்,

அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள், அமைச்சருடன் கார்களில் ஒவ்வொரு வாக்குச் சாவடியாக சென்றுவாக்காளர்களை மிரட்டி வருகின்றனர். கள்ள ஓட்டுப் போடவும் அவர்கள் தூண்டி வருகிறார்கள்.

இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது, ஜனநாயக நடவடிக்கைக்கு முரணானது. இதுகுறித்து மாநில தேர்தல்கமிஷனுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் ராதாகிருஷ்ணனின் புகாரை தளவாய் சுந்தரம் மறுத்துள்ளார். இந்த புகாருக்கு ஆதாரமே கிடையாதுஎன்றும் இதை பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபிக்க வேண்டும் என்றார் தளவாய் சுந்தரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X