For Daily Alerts
Just In
எல்லையில் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
ஜம்மு:
காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று (வியாழக்கிழமை) இரவுதிடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்தியாவைச் சேர்ந்த ஹிராநகர், ராஜ்பாக், சம்பா, ராம்கார், ஆர்னியா, ஆர்.எஸ். புரா மற்றும் கனாசாக் ஆகியஎல்லைப் புறப் பகுதிகளில் உள்ள 42 ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இதற்குத் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இரவு முழுவதும் நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டை, இன்று காலையும் தொடர்ந்து நடந்ததாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
Comments
Story first published: Friday, October 19, 2001, 5:30 [IST]