மக்கள் புரட்சி என்றால் என்ன? கருணாநிதி விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பார்த்து விட்டு மக்கள் பொறுமை இழந்து பொங்கிஎழுவதுதான் மக்கள் புரட்சி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
எனது கைது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம்.
இதுவரை நடவடிக்கை இல்லை. இதுகுறித்து எங்களுக்கு அதிருப்தியா என்று கூற முடியாது. இதுகுறித்து ஏற்கனவேதெளிவாக கூறியிருக்கிறேன்.
அதே சமயத்தில் அவர்களது நடவடிக்கையில் திருப்தி ஏற்பட்டுள்ளது என்றும் நான் கூறவில்லை.
இந்த ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நீதிபதி வீட்டையே தாக்கியவர்கள்தான் இந்த ஆட்சியினர்.
எனவே அரசு வக்கீல் வெங்கடபதி வீட்டில் தாக்குதல் நடத்தியது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விஷயமல்லஎன்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications