2வது கட்ட தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை:
தமிழகத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது உள்ளாட்சித் தேர்தலின்போது 66 சதவீத வாக்குகள் பதிவாகின.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் கள்ள ஓட்டுக்கள் சரமாரியாக போடப்பட்டதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு,முதல் கட்டத் தேர்தலைப் போலவே வன்முறையுடன்முடிந்திருக்கிறது.
நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில்தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக 66சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பெருமளவில் வன்முறை நடந்ததால் 19வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடக்கும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன்தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் நகராட்சித் தேர்தலில், இரண்டு வேட்பாளர்களின் சின்னங்கள் மாறியிருந்தன. ஆனால் சிலவாக்காளர்கள் வாக்களித்துச் சென்ற பிறகே இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேறு வாக்குச் சீட்டுக்கள் வரவழைக்கப்பட்டன. இந்தக் குழப்பம் காரணமாக இரவு 9 மணி வரைஅந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.
மற்றொரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்காளர் வாக்களிக்க வந்தபோது, அவர் கள்ள ஓட்டுப் போட வந்துள்ளதாகஒரு வேட்பாளர் புகார் கூறினார். இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வாக்களிக்க வந்த முருகன் என்ற அந்த வாக்காளர் ஓட்டுப் பெட்டியைக் கீழே தள்ளி விட்டுவிட்டுஅங்கிருந்து சென்றார். இதையடுத்து ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றது. இதனால் சுமார் 10நிமிடத்திற்கு வாக்கு சாவடி மூடப்பட்டது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications