ஆப்கானிஸ்தானில் நுழைந்தது அமெரிக்க தரைப் படை
வாஷிங்டன்:
அமெரிக்கத் தரைப்படையினர் ஆப்கானிஸ்தானில் இறங்கி தாக்கி ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவில்ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தப் படைகள் ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் இறங்கின.
ஆனால், இப்போது அமெரிக்கத் தரைப்படையினர் ஆப்கானிஸ்தானில் நுழைந்துள்ளது உறுதியாகிவிட்டது.
அதே போல ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் தஜிகிஸ்தானிலும் அமெரிக்கத் தரைப் படைகள் தயார் நிலையில்நிறுத்தப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் இந்தப் படைகள் உள்ளே இறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் படைகள் எந்த நேரமும் ஆபகானிஸ்தானுக்குள் நுழைந்து மஷார்-ஏ-ஷெரீப் நகரைப் பிடிக்கலாம் என்றுகூறப்படுகிறது.
முதலில் சிறிய அளவிலான படைகளை அனுப்பி நிலைமையை ஆராயந்துவிட்டு பின்னர் பெரும் படைகளைதரையில் இறக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பெரும் தாக்குதலுக்கு முன்னோடியாகத் தான் இந்த சிறப்புப்படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இரவில் இந்தப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. இவர்கள் தலிபான்களின் கண்களில் படாமல்குகைகளில் மறைந்துள்ளனர்.
விரைவில் இவர்களுடன் பிரிட்டிஷ் தரைப் படைகளும் இணைய உள்ளன.
பெரிய அளவிலான தரைப் படையை இறக்குவதகுத் தேவையான அடிப்படை வேலைகளை இந்தப் படைகள்செய்யும்.