For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கான் செல்ல முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலைல்

By Staff
Google Oneindia Tamil News

காஷமீர்:

காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் செல்ல முயன்ற 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம்சுட்டுக் கொன்றது. இவர்களில் 4 பேர் பாகிஸ்தானியர்கள்.

இவர்கள் அமெரிக்காவுக்கு எதிரான போரில் தலிபான்களுக்கு உதவ காஷ்மீரில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத்தெரிகிறது.

நேற்றிரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் நவ்காவ்ம் பகுதியில் உள்ள ஈகிள் காம்ப்ளக்ஸ் அருகிலிருந்துகோர்னால் நாளா என்ற கால்வாய் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குள் இந்தத்தீவிரவாதிகள் நுழைய முயன்றனர்.

இதையறித்த ராணுவத்தினர் அவர்களை சுற்றி வளைத்தனர். உடனடியாக சரணடைந்துவிடுமாறு கூறினர். ஆனால்,அவர்கள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அவர்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியது.அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

அதே போல தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ஷோபியான் பகுதியின் அஷிர்புராவில் நேற்று போலீஸ்,ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் இணைந்து கூட்டாக நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின்அல்-பாதர் அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் 9 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதாக உளவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இரவுமுழுவதும் கூட்டுத் தாக்குதல் தொடர்ந்தது.

உர்பாச் பகுதியில் ராணுவம் மேலும் ஒரு தீவிரவாதியை நேற்றிரவு சுட்டுக் கொன்றது. அவனிடமிருந்து ஏ.கே.-47துப்பாக்கியும் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X