மர்மப் பார்சல்.. திருப்பதி லட்டு.. ஆந்த்ராக்ஸ் பீதி..
சென்னை:
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு மர்ம பார்சலில் திருப்பதி லட்டு வந்ததை அடுத்து அதுஆந்த்ராக்ஸ் பார்சலாக இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் சாந்தி அபார்ட்மெண்டில் வசித்துவருபவர் சேகர் என்ற தொழில் அதிபர்.
இவருக்கு கொரியர் சர்வீசில் ஒரு பார்சல் வந்தது. அதைப் பெற்றுக்கொண்ட சேகர் கவரைத் திருப்பிப் பார்த்ததில்அனுப்பியவரின் முகவரி இல்லாததைக் கண்டு சந்தேகப்பட்டார்.
பிறகு அதை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பிரிக்கலாமா என்று ஆலோசனை கேட்டார்.அவர்களோ அட்ரஸ் இல்லாமல் வந்தால் அது ஆந்த்ராக்ஸ்தான் என்று அடித்துக் கூறிவே, அதிர்ந்து விட்டார் சேகர்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்து அந்தப் பார்சலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அதை வாங்கி ஒரு கூடையில் போட்டு மூடிவைத்துவிட்டு, சென்னை இணைக் கமிஷ்னர்சைலேந்திரபாபுவுக்கு தகவல் கொடுத்தனர்.
அவரும் விரைந்து வந்து அனைத்துப் போலீசாரையும் மூக்கை மறைத்துத் துணியைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்.இதுகுறித்துத் தகவல் அறிந்து நிருபர்களும் கூடிவிட்டனர்.
பிறகு ஒரு கத்தரியால் சைலேந்திரபாபு அந்தப் பார்சலின் மேல்கவரைக் கத்தரித்தார். உள்ளே பார்த்தால் பாலிதீன்கவருக்குள் உருண்டையான ஒரு பொருள் இருந்தது. பிறகு அதையும் பிரித்துப் பார்த்தததில் அதற்குள், ஒருலட்டும், வடை, முருக்கு போன்ற திருப்பதி கோயில் பிரசாதம் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அதிலிருந்த கடிததைப் பிரித்துப் பார்த்ததில் அதில், சேகரின் பெங்களூர் நண்பர் குருராஜ் திருப்பதிசென்றதாகவும், அப்போது வாங்கிய பிரசாதத்தை அனுப்பியிருப்பதாகவும் எதியிருந்தார்.
இதைப் பார்த்ததும் சேகர், போலீஸ் அதிகாரிகள் உட்பட அங்கிருந்த அனைவரும் பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications