டிரைவர் இல்லாமல் 20 கி.மீ. ஓடிய ரயில் இன்ஜின்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே நின்றுகொண்டிருந்த ரயில் இன்ஜின் மீது மற்றொரு இன்ஜின் மோதியதால், டிரைவர்இல்லாமல் 20 கி.மீ.தூரம் வரை ஓடி தடுப்பு கட்டையில் மோதி நின்றது.
அரக்கோணம் அருகே வாலாஜா ரயில்வே ஷ்டேஷனில் ரயில் பெட்டிகளை வேறு தண்டவாளத்துக்கு மாற்றும் பணிநடந்துகொண்டிருந்தது.
அப்போது ஒரு பெட்டியை இழுத்துக்கொண்டு வந்த இன்ஜின் நின்றுகொண்டிருந்த மற்றொரு இன்ஜின் மீதுஎதிர்பாராத விதமாக மோதியது. அந்தப் பாதை இறக்கமாக இருந்ததால் நின்றுகொண்டிருந்த அந்த இன்ஜின் 40கி.மீ. வேகத்தில் ஓட ஆரம்பித்தது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அந்த இன்ஜின் வந்துகொண்டிருக்கும் தண்டவாளத்தில் வேறு ரயில் எதுவும்வராமல் நிறுத்தும்படி அருகில் இருந்த ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை அனுப்பினர். இதையடுத்து ரயில்கள்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.
பின்னர் அந்த இன்ஜினையும் வேறு ஒரு மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு, அந்தப் பாதையில் பெரிய தடுப்புக்கட்டைகளை வைத்தனர்.
20 கி.மீ. ஓடிய பிறகு அந்தத் தடுப்புக் கட்டைகளில் மோதிய இன்ஜின் தடம் புரண்டு நின்றது.
ஆள் இல்லாமல் 20 கி.மீ. ஓடினாலும் ரயில்வே ஊழியர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் விபத்துஎதுவும் நேராமல் தவிர்க்கப்பட்டது.