சென்னை-மும்பை, திருச்சி-அகமதாபாத் ரயில் நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இணை ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருப்பதால், சென்னை-மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும்திருச்சி-அகமதாபாத் ரயில்களின் நேரத்தை தென்னக ரயில்வே மாற்றி அமைத்துள்ளது.
நாளை சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக நேரமான காலை 6.50க்குப்பதிலாக பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்படும்.
அதேபோல திருச்சியிலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் செல்லும் குளிர்காலச் சிறப்பு ரயில் நாளைகாலை 10.00 மணிக்கு பதிலாக மாலை 5.00 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் இணை ரயில்கள் (எதிர்முனையிலிருந்து கிளம்பும் ரயில்கள்) தாமதமாக வருவதால் நாளை மட்டும் இந்தமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்ன ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications