For Daily Alerts
Just In
நமக்கு ஆந்த்ராக்ஸ் புதிதல்ல: மத்திய அமைச்சர்
திருச்சி:
ஆந்த்ராக்ஸ் பிரச்சனை இந்தியாவுக்குப் புதிதல்ல என்றும் அதைச் சமாளிக்கும் திறமை இந்தியாவுக்கு உள்ளதுஎன்றும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜா கூறினார்.
இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) திருச்சி வந்த அமைச்சர் ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,
ஆந்த்ராக்ஸ் பிரச்சனை இநதியாவுக்குப் புதிதான ஒன்றல்ல. கடந்த ஆண்டே இந்த கிருமியால் தாக்கப்பட்ட 26 பேர்கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் பூரண குணம் அடைந்தனர். இந்த சிகிச்சையில் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மெர்மருத்துவமனையின் பங்கு பாராட்டத்தக்கது.
மேலும், இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள பல மருத்துவமனைகளிலும், இந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்துஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Story first published: Saturday, October 20, 2001, 5:30 [IST]