அமெரிக்காவுக்கு ஆந்த்ராக்ஸ் மருந்து: இந்தியா அனுப்புகிறது
டெல்லி:
அமெரிக்காவுக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள ஆந்த்ராக்ஸ் எதிர்ப்பு மருந்தை அனுப்ப இந்தியா முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் ஆந்த்ராக்ஸ் நோய்த் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரங்களில் 3 பேர் இந் நோய்க்குபலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு ஆந்த்ராக்ஸ் நோய்த் தாக்குதல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் இந்த நோயை எதிர்க்கும் மிகச் சிறந்த மருந்தான சிப்ரோபிளாக்சின் போதுமான அளவுஅமெரிக்காவிடம் இல்லை.
இதையடுத்து தன்னிடம் உள்ள இந்த மருந்தை அமெரிக்காவுக்குத் தர இந்தியா முன் வந்துள்ளது.
நேற்று டெல்லியில் பாதுகாப்புத்துறைக்கான ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது.அதில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அமெரிக்காவில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைவிளக்கினார்.
இதையடுத்து உடனடியாக அமெரிக்காவுக்கு மருந்து அனுப்ப பிரதமர் வாஜ்பாய் உத்தரவிட்டார். இந்தியாவில்உள்ள அமெரிக்கத் தூதர் மூலம் இந்த மருந்து அனுப்பப்படும்.












Click it and Unblock the Notifications