வாக்கு எண்ணும் பணி துவங்கியது
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமைகாலை 8 மணிக்குத் துவங்கியது.
கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்நடந்தது. இதுதவிர பல்வேறு புகார்கள் காரணமாக மேலும் இரண்டு நாட்கள் மறுவாக்குப் பதிவு நடந்து முடிந்தது.
இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத்துவங்கியது. சென்னையில் 11 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் 940இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் போது புதிய முறை கையாளப்படுகிறது. வார்டு வாரியாகஎண்ணாமல், வாக்குச் சாவடி வாரியாக ஓட்டுக்கள் எண்ணப்படவுள்ளன. இதன் மூலம்கள்ளஓட்டுக்களைக் கண்டுபிடிக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கள்ள ஓட்டுக்களை தவிர்க்கும் பொருட்டு மூன்று முக்கியஉத்தரவுகளை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு தமிழகதேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிக அளவில் கள்ள ஓட்டுக்கள்போடப்பட்டதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட பல கட்சிகள்ஆளுநரிடம், தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்தன.
இந்த நிலையில், கள்ள ஓட்டுக்களை தவிர்க்கும் வகையில் சில உத்தரவுகளை தேர்தல்ஆணைய செயலாளர் தனவேல் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சரியான மடிப்பு இல்லாமல், திணிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டுகளைநிராகரித்து விட வேண்டும், கவுன்டர்பாயிலுடன் கூடிய வாக்குச் சீட்டுக்களையும்நிராகரித்து விட வேண்டும், வாக்குச் சீட்டில் அம்புக்குறியைத் தவிர வேறு எந்தமுத்திரைகள் பதிவாகி இருந்தாலும் அவற்றையும் நிராகரித்து விட வேண்டும் என்றுஉத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர வாக்குச் சாவடி தேர்தல் அதிகாரியின் கையெழுத்து இல்லாத ஓட்டுச்சீட்டுக்கள் கள்ள ஓட்டுக்களாக கருதி நிராகரிக்கப்படும்.
மேலும், வாக்குச் சாவடி வாரியாக ஓட்டுக்கள் எண்ணப்படுவதால் வார்டுதேர்தலுக்கான முடிவுகளை வாக்கு எண்ணும் மைய தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பர்.மேயர் தேர்தலுக்குரிய முடிவை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு அறிவிப்பார்.