கடல் அலைக்குப் பலியான மன்னர் குடும்பத்து பெண்
சென்னை:
கேரள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மன்னர் பரம்பரையான ராஜா ரவி வர்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் கே.கே.வர்மா. இவர் சென்னைஅருகே உள்ள பாலவாக்கம் கடற்கரைப் பகுதியில் குடியிருந்து வந்தார்.
இவரது மகள் வழிப் பேத்தியான மாதங்கி வர்மாவும் இங்கேயே வசித்து வந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில்உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
சனிக்கிழமை மாலையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரைக்கு வாக்கிங் சென்றிருந்தார் மாதங்கி.அப்போது பெரிய அலை ஒன்று வந்து மாதங்கியை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் சிக்கி மூச்சுத் திணறிமாதங்கி பரிதாபமாக இறந்தார்.
வாக்கிங் சென்ற பேத்தியைக் காணவில்லை என்று நீலாங்கரை போலீஸில் கே.கே.வர்மா புகார் கொடுத்தார்.இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பாலவாக்கத்தில் இருந்து 1கிலோமீட்டர் தொலைவில் அவரது பிணம் ஒதுங்கியது தெரிய வந்தது.