5 நார்தர்ன் அல்லயன்ஸ் படையினரை தூக்கிலிட்ட தலிபான்கள்
காபூல்:
போர்களத்தில் கைது செய்யப்பட்ட நார்தர்ன் அல்லயன்ஸ் படையைச் சேர்ந்த 2 கமாண்டர்கள் மற்றும் 3 வீரர்களைதலிபான் படையினர் பொது இடங்களில் தூக்கிலிட்டனர்.
இதற்கிடையில் ஆப்கானின் வடக்குப் பகுதியை ஆளும் நார்தர்ன் அல்லயன்ஸ் படையினரும், தலிபான்கள் மீதுதாக்குதல் நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில் தலிபான்களின் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்த நார்தர்ன் அல்லயன்ஸ் படையைச் சேர்ந்த 5பேரை தலிபான்கள் கைது செய்து மஸார்-ஏ-ஷெரீப் நகரத்தில் உள்ள பொது இடங்களில் தூக்கிலிட்டுள்ளனர்.
இதுகுறித்து தலிபான்களின் பக்தார் செய்தி நிறுவனத்தின் தலைவர் அபுல் ஹனன் ஹேமத் கூறுகையில்,
நார்தர்ன் அல்லயன்ஸ் படையைச் சேர்ந்த 5 பேர் போர்க்களத்தில் கடுமையாகப் போரிட்டதுடன், தலிபான் ராணுவநடவடிக்கைகள் பற்றி வேவு பார்த்தனர். இவர்களில் 2 பேர் கமாண்டர்கள், மற்ற 3 பேரும் போர் வீரர்கள்.
இவர்கள் 5 பேரையும் தலிபான் படையினர் கைது செய்து மஸார்-ஏ-ஷெரீப் நகரத்தில் வெவ்வேறு பொதுஇடங்களில் தூக்கிலிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மஸார்-ஏ-ஷெரீப் நகரம் பால்க் மாகாணத்தின் தலைநகராக உள்ளது. கடந்த 1998லிருந்து இந்த மாகாணம்தலிபான்கள் ஆட்சியின் கீழ் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த நகரைக் கைப்பற்ற நார்தர்ன் அல்லயன்ஸ்படையினர் கடுமையாகப் போரிட்டு, ஓரளவு முன்னேற்றமும் அடைந்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications