அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து: 25 வீரர்கள் பலி?
காண்டஹார்:
அமெரிக்க ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் 20 முதல் 25 அமெரிக்க வீரர்கள் பலியாகிவிட்டதாகதலிபான் கூறியுள்ளது.
ஆனால், இந்த ஹெலிகாப்டர் காண்டஹார் மீது பறந்தபோது தங்களால் சுடப்பட்டு சேதமடைந்ததாகவும்உடனடியாக அது பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தரையில் விழுந்து நொறுங்கியதாவும் தலிபான் கல்வியமைச்சர்முல்லா அமிர் கான் முத்தாகி கூறியுள்ளார்.
இதில் மொத்தம் 20 முதல் 25 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் அதை அமெரிக்கா மறைப்பதாகவும்கூறினார்.
இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள யு.எஸ்.எஸ். கிட்டி என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து இந்தஹெலிகாப்டர் ஆபகானுக்குள் பறந்து சென்றதாகக் கருதப்படுகிறது. ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது.இந்த ஹெலிகாப்டர் போர் நடவடிக்கையில் ஈடுபடவேயிலலை. அது பாகிஸ்தானில் இருந்து வீரர்களுக்கு உணவு,உடைகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால் முத்தாகி கூறுகையில், மொத்தம் 5 ஹெலிகாப்டர்கள் காண்டஹாருக்குள் பறந்து வந்தன. ஒவ்வொருஹெலிகாப்டரிலும் 20 முதல் 25 அமெரிக்க வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர்கள் மீது தலிபான் வீரர்கள்விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்தது.உடனடியாக அது பாகிஸ்தானை நோக்கி பறந்து சென்றது.
ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாகவே விழுந்து நொறுங்கிவிட்டது. இதில் அனைத்து வீரர்களும்பலியாகிவிட்டனர் என்றார்.