பேரூராட்சிகளைக் கைப்பற்றும் சுயேச்சைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள 1,234 வார்டுகளில்சுயேச்சைகள் 530 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் வந்தவண்ணம் உள்ளன. இதுவரை 1,234வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுயேச்சைகள் 530 இடங்களில்வெற்றிபெற்றுள்ளனர். மேலும் பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் தான் முன்னணியில் உள்ளனர்.
மேலும் அதிமுக 288 இடங்களிலும், திமுக 214 இடங்களிலும், தமாகா 69 இடங்களிலும், காங்கிரஸ் 17இடங்களிலும், மதிமுக 18 இடங்களிலும், பாமக 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பேரூராட்சித் தேர்தலைப் பொருத்தவரை அதன் தலைவர் தேர்தல் முடிவுகளும் பெரும்பாலும் சுயேச்சைவேட்பாளர்களுக்குச் சாதகமாகவே உள்ளன.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications