தேர்தலில் வன்முறை நடக்கவில்லையா?- கருணாநிதி கேள்வி
சென்னை:
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை என்றுதமிழக அரசு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிப்பதாவது,
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 53 பூத்களில் மட்டுமேமறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. அப்போது தமிழகத் தேர்தல் அதிகாரியாக இருந்தவரும் தற்போது அதிமுகஎம்.பியாக இருப்பவருமான மலைச்சாமி உள்ளாட்சித் தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்ததாக அறிவித்தார்.
ஆனால் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட பூத்களில் மறுவாக்குப்பதிவுநடத்தப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் எதிர்கட்சி வேட்பாளர்களை ஆளுங்கட்சியினர் தாக்கியுள்ளனர்.எதிர்கட்சி எம்.எல்.ஏவைக் கூட விட்டுவைக்கவில்லை.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிமுக ஆட்சியில் வன்முறைக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதற்கு சிறந்த சான்றுகளாகஅமைகிறது.
நிலைமை இவ்வாறுஇருக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்ளாட்சித் தேர்தல் பெரிய அளவுவன்முறை எதுவுமின்றி அமைதியாக நடைபெற்றதாகக் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.