For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் பிடிவாதம்: கதிர்காமர் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலை புலிகள் அமைதி பேச்சுவார்த்தைக்கும், சமாதானத்திற்கும் தயாராக இல்லைஎன்றும் அவர்களின் பிடிவாதம் தான் அமைதி முயற்சிகளுக்கு தடைகளாக உள்ளனஎன இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கை அரசு அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் விடுதலை புலிகளுக்குஅழைப்பு விடுத்துள்ளது. ஆனாலும் விடுதலை புலிகள் சமாதானத்திற்கு தயாராகஇல்லாததால் அரசு எந்த அமைதி முயற்சியில் தொடர்ந்து ஈடுபட முடியாத நிலைஉள்ளதாக கதிர்காமர் கூறியுள்ளார்.

இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் அவர்கூறியிருப்பதாவது:

இலங்கை அரசு எப்போது சண்டையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான்நினைக்கிறது. சண்டையை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்என்றுதான் அரசு விரும்புகிறது.

அமைதி பேச்சுவார்த்தைக்கான முதல் கட்ட நடவடிக்கையாக சண்டை நிறுத்தத்தைஅறிவிக்க அரசு தயாராக உள்ளது. விடுதலை புலிகளும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.

ஆனால் விடுதலை புலிகள் இதற்குத் தயாராக இல்லை. எந்த விதமான அமைதிபேச்சுவார்த்தைக்கோ சமாதானத்திற்கோ கூட அவர்கள் தயாராக இல்லை.எதிர்கட்சியான யு.என்.பியும் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறது.

இந்நிலையில் எந்த விதமான முடிவையும் இலங்கை அரசால் எந்த விதமான முடிவும்எடுக்க முடியாத நிலை உள்ளது.

அமைதி மலர வேண்டும் என்றுதான் அரசு விரும்புகிது. இலங்கை அரசு என்றுமேவன்முறைக்கு துணையாக இருக்காது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X