பாண்டிச்சேரி: அமைச்சரவையில் அதிமுக, தமாகா சேருமா?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவையும்த.மா.காவையும் இடம் பெறச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகபாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
எம்.எல்.ஏவாக இல்லாமலே பாண்டிச்சேரி முதல்வராக பதவி வகித்துவந்தார்சண்முகம்.
6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே முதல்வராகநீடிக்க முடியும் என்ற நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக பாண்டிச்சேரிகாங்கிரஸ் கட்சியினர் யாரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யதயாராக இல்லாததால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பாண்டி முதல்வராக்ககாங்கிரஸ் தலைமை முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ரங்கசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு பாண்டிச்சேரிமக்கள் காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2பேரும் ஆதரவளிக்க முன் வந்துள்ளனர்.
இந்நிலையில் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அதிமுக,த.மா.கவை இடம் பெற வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக பாண்டிச்சேரிகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இது குறித்து பாண்டிச்சேரி அதிமுகசெயலாளர் நடராஜனுடனும். தமாகா தலைவர் பாலாஜியுடனும் பேச்சுவார்த்தைநடத்தியுள்ளேன்.
அவர்களை அமைச்சரவையில் இடம் பெற வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்துநடைபெற்று வருகிறன என்றார்.












Click it and Unblock the Notifications