கோவை, சேலம், நெல்லை ம ாநாகராட்சிகளில் அதிமுக முன்னணி
சென்னை:
நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது. சென்னை, மதுரை, திருச்சிமாநகராட்சிகளில் திமுகவும், கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலிமாநகராட்சிகளில் அதிமுக கூட்டணியும் முன்ணணியில் உள்ளன.
கடந்த 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தமிழக்தில்உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலிலும் வன்முறை சம்பவங்கள்நடைபெற்றன. கள்ள ஓட்டுகளும் போடப்பட்டன.
வன்முறை சம்பவங்கள், கள்ள ஓட்டு போடப்பட்ட பல வாக்கு சாவடிகளில் மறு தேர்தல்நடைபெற்றது.
வாக்கு எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. சென்னையில் 11மையங்கள் உடப்ட தமிழகம் முழுவதிலும் 951 மையங்களில் வாக்கு எண்ணும் பணிநடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மு.க. ஸ்டாலின் முன்னணியில்உள்ளார். மதுரை மாநகராட்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செ. ராமச்சந்தரன்முன்னணியில் உள்ளார். திருச்சி மாநகராட்சியிலும் திமுக வேட்பாளரே முன்னணிவகித்து வருகிறார்.
சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் அதிமுக கூட்டணி முன்னணிவகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications