முஷரப்புடன் பேச்சு நடத்த வாஜ்பாய் மறுப்பு
லக்னோ:
காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தத்தயாராக இல்லை என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தின் போது பாகிஸ்தான் அதிபருடன் பேச்சுவார்த்தைநடத்துவீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, அதை உங்கள் யூகத்துக்கேவிட்டுவிடுகிறேன் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஸ்ரீநகரில் இந்திய விமான தளத்தின் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படையினர்தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பாகிஸ்தான் தொடர்ந்து வன்முறையில்ஈடுபடுவதைதான் காடடுகிறது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த விதமான பயனும் ஏற்படாது.
அமெரிக்கா கூறியபடி இந்தியாவில் வெளிநாட்டு கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறுவது தவறு.
கார்கில் போரின் போது காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தானுக்கு கொடுக்குமாறுஅமெரிக்க கூறியது. ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை.
அப்போது என்னை அமெரிக்காவுக்கு வருமாறு அமெரிக்கா அழைப்புவிடுத்திருந்தது. அந்த அழைப்பை நான் ஏற்கவில்லை. யாருக்கும், எந்த நிலையிலும்இந்தியா அடிபணியாது என்று கூறினார்.