சென்னை மாநகராட்சி - 67 வார்டுகளைக் கைப்பற்றியது அதிமுக
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மட்டும் 67வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த 154 வார்டுகளுக்கான தேர்தலின் முடிவுகள் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவில்அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
இதில் அதிமுக மட்டும் 67 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு அடுத்தபடியாக திமுக 61 வார்களைவென்றுள்ளது.
கட்சி வாரியாக சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் விவரம்:
மொத்த வார்டுகள் - 155
தேர்தல் நடந்தது - 154
முடிவுகள் அறிவிக்கப்பட்டது - 154
அதிமுக - 67
திமுக - 61
தமாகா - 14
பாஜக - 3
காங்கிரஸ் - 2
மதிமுக - 1
பாமக - 1
இந்திய கம்யூனிஸ்டு - 1
மார்க்சிஸ்ட் - 1
சுயேச்சைகள் - 3
சென்னை மாநகராட்சி மேயராக திமுகவின் மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அதிகமானவார்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.