அவதூறு பிரச்சாரத்தால் திமுக தோற்றது - வாழப்பாடி
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரின் அவதூறு பிரச்சாரத்தை முறியடித்து அதிமுக மகத்தான வெற்றிபெற்றுள்ளதுஎன்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மீது திமுகவினர் செய்த அவதூறு பிரச்சாரம் எடுபடவில்லை என்பது தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளிலும், பெரும்பாலான நகராட்சி மற்றும்பேரூராட்சிகளிலும் அதிமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
மேலும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுக கூட்டணியில் நீடித்திருந்தால், தமிழக அரசியலில்இருந்து திமுக துடைத்து எறியப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கருணாநிதியின் அவதூறுப் பிரச்சாரத்திற்குத் துணைபோன பாட்டாளி மக்கள் கட்சியும் படு தோல்வியைச்சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் பிறந்து வளர்ந்த திண்டிவனம் நகராட்சியில் கூட அந்தக் கட்சியால்வெற்றிபெற முடியவில்லை.
மேலும் சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு, பா.ம.க தோல்வியைச் சந்தித்துள்ளது.
மேலும் காங்கிரஸ் தலைமையிலான 3வது அணி, தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகள் ஆகிய 2 அணிகளையும்தாண்டி அதிமுக மகத்தான வெற்றிபெற்றுள்ளது பாராட்டுக்குரியது.
இவ்வாறு வாழப்பாடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.