For Daily Alerts
Just In
கணவர் தோற்றதால் அதிர்ச்சியில் மனைவி சாவு
கீரனூர்:
கீரனூர் அருகே பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கணவர் தோற்றதால் அந்த அதிர்ச்சியில் மனைவி இறந்தார்.
கீரனூர் அருகே புலியூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வீரப்பட்டியைச் சேர்ந்த கணபதி என்பவர் சுயேச்சையாகப்போட்டியிட்டார்.
ஆனால் இவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்லியடைந்தார். இவர் தோற்றுப் போன செய்தியைக்கேட்டதும் அதிர்ச்சியில் இவருடைய மனைவி ராஜலட்சுமி (35) அதிர்ச்சியில் இறந்து போனார்.
இவரது இறப்பிற்கு துக்கம் விசாரிக்க 20 பெண்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன், ஒரு மரத்தில் மோதியதில் 18பேர் காயமடைந்தனர்.
வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கீரனூர் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments
admk nellai chennai stalin tamilnadu tmc mayor corporation panchayat civic polls local body election
Story first published: Tuesday, October 23, 2001, 5:30 [IST]