உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது என்கிறார் பன்னீர்
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மிக சிறப்பான முறையில் அமைதியாக நடந்து முடிந்தது என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களாகிய மருதுபாண்டியர் சகோதரர்களின் 200வது நினைவு நாள் இன்று (புதன்கிழமை)சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை கிளம்பியபன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது:
காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும்இல்லாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. தமிழக மக்கள் மதச்சார்பற்ற கூட்டணி மீது தங்களுக்குள்ளநம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
அதிமுக பெரும்பாலான நகராட்சித் தலைவர் பதவிகளையும் வென்றுள்ளது. இதன் மூலம் அதிமுகவுக்கு கிராமத்தில்மட்டுமல்ல நகரத்திலும் ஆதரவு உள்ளது என்பது தெளிவாகிறது.
தேர்தலின் போது முறைகேடு நடந்தது, வாக்கு எண்ணிக்கையின் ாபது முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டிமறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறி வருகிறார். தேர்தலில்தோல்வியுற்றவர்கள், தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் இது போல் கூறுவது வழக்கமான ஒன்றுதான்.
கொப்பரை தேங்காய் ஊழல் விவகாரத்தில் அரசு தேவையான நடவடிக்ககைகளை எடுக்கும் என்றார்பன்னீர்செல்வம்.
உங்கள் சொந்த ஊரான பெரியகுளத்திலேயே அதிமுக தோல்வியுற்றுவிட்டதே என்று நிருபர்கள் முதல்வரிடம்கேள்வி எழுப்பியபோது, ஊர்காவல் தலைவன் ஊர் காவலுக்கு செல்லும் போது அவன் வீடுகொள்ளையடிக்கப்படுவது போலத்தான் நடந்திருக்கிறது என்று பதிலளித்தார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications