கும்பகோணம் பட்டாசு கடையில் தீ விபத்து: ஒருவர் பலி
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுத்த மாதம் (நவம்பர்) 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நினைவுக்குவருவது பட்டாசும், புத்தாடையும்தான்.
தீபாவளிக்கு இன்னமும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டாசுக் கடைகள்முளைக்க ஆரம்பித்து விட்டன.
கும்பகோணத்தில் ஆரணிக்கரை அருகே உள்ள பட்டாசுக் கடை ஒன்று வைக்கப்பட்-டு, அங்-கு பல விதமானபட்டாசுகளும் வைக்கப்பட்டிருந்தன.
பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பட்டாசுகள் பெரும் சத்தத்துடன் வெடிக்கஆரம்பித்தன.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பகோணம், நீடாமங்கலம் மற்றும் அருகில்உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ஒருவர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.