வன்முறையில் ஈடுபட்ட அதிமுக மீது வழக்கு: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியது, கள்ள ஓட்டுப் போட்டது குறித்துநடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று (புதன்கிழமை) சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது கூறியதாவது,
சென்னையில் மேயர் பதவித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தேர்தல்முடிவை மாற்றி அறிவிக்கும்படி அதிமுகவினர் அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இருப்பினும் சுதாரிப்பான திமுகதொண்டர்கள் இதைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.
மேலும் சென்னையில் உள்ள ஒரு வார்டில் மொத்த வாக்காளர்கள் 40,000 பேர் தான். ஆனால் அங்கு 62,115 பேர்மேயர் பதவிக்கு வாக்களித்ததாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் பதிவான செல்லாத ஓட்டுக்கள் மொத்தம்13,000 மட்டும் தான். ஆனால் தற்போது அது 42,000 ஆகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இதுபோன்ற வன்முறைகளைஎதிர்த்து திமுக வழக்குத் தொடரும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications