தேர்தல் அராஜகம்: விசாரணை கோருகிறது அரசு ஊழியர் அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகள், அராஜகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்கவேண்டும் என்று சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பணியாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் வகையில் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நகர்பாலிகா சட்டத்தையும்,பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும் இழிவுபடுத்தி விட்டது இந்தத் தேர்தல்.
இந்தத் தேர்தலில் நடந்த முறைகேடுகள், ஆளுங்கட்சியினரின் அராஜகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம்தனிக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications