டீக்கடையில் வெடி மருந்துகள் வெடித்து முதியவர் பலி
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகரில் டீக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் 75 வயது முதியவர் இறந்தார்.
வலங்கைமான் நகரில் உள்ள டீக்கடை ஒன்றில் புதன்கிழமை காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது அருகிலிருந்துவீடுகள், கடைகளுக்குப் பரவியது.
அப்போது ஒரு கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளில் தீபரவியதால் அந்தப்பகுதியே போர்க்களம் போல ஆனது. சுமார் அரை மணி நேரத்திற்கு அந்த வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின.
இந்த தீவிபத்தில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரான 75 வயதான முதியவர் படுகாயமடைந்துஉயிரிழந்தார். மற்ற 15 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications