இளங்கோவனை நீக்க காங். அதிருப்தி கோஷ்டி தீவிரம்
சென்னை:
காங்கிரஸ் கொள்கைகளைக் காக்கவும், அவற்றை நிலை நாட்டவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்துஇளங்கோவனை நீக்க வேண்டும் என்ற அதிருப்தி கோஷ்டியினர் கோரியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சக்திவேல், கவுரி சங்கர்,ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் இளங்கோவன்தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான்.மேலும் ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டதும் ஒரு பெரியதவறாகும்.
உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவீத இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்நிறுத்தப்படவில்லை.
எல்லாக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம் போன்றகட்சிகளை காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்ததால் இந்தக் கட்சிகள் தான் லாபமடைந்துள்ளன.
திமுகவினரோடு சேர்ந்துகொண்டு போலீஸ் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறிவருகிறார்.உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் ஊதுகுழலாகவும் இவர் செயல்பட்டார்.
தமிழக காங்கிரஸ் கொள்கைகளைக் காக்கவும், நிலை நாட்டவும் இளங்கோவனை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications