அமைச்சர்களுக்கு ஜெ. அவசர அழைப்பு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக அமைச்சர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை தேர்தல்பொறுப்பாளராக நியமித்து, அம்மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றிக்காக உழைக்கும்படி ஆணையிட்டிருந்தார்.
இதையடுத்து அனைத்து அமைச்சர்களும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல்பணியாற்றினார்கள்.
தற்போது தேர்தல் முடிந்து அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து அமைச்சர்களையும்சென்னைக்கு அழைத்து, தனது போயஸ் கார்டன் வீட்டில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரவர் பணியாற்றிய மாவட்டங்களில் வெற்றிபெற்ற அதிமுகவினரின் பட்டியல்,தோல்வியடைந்தவர்களின் பட்டியல் மற்றும் மறைமுக வேலைபார்த்த அதிமுகவினரின் பட்டியலுடன் வருமாறும்அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அனைத்து அமைச்சர்களும் பீதியுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications