காபூல் நகரில் இரவு முழுவதும் குண்டு மழை
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது அமெரிக்க விமானங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும்குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
எதையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தலிபான் படையினர், இதையும் எதிர்பார்த்தனர். விமான எதிர்ப்புபீரங்கிகளைப் பயன்படுத்தி அந்த அமெரிக்க விமானத்தின் மீது பதிலடி தாக்குதல் நடத்தினர்.
பிறகு மீண்டும் இரவு 9.35 மணிக்கு காபூலின் வடகிழக்குப் பகுதி மேல் பல விமானங்கள் பறந்து வந்தன. இம்முறைகொஞ்சம் அதிக உயரத்திலேயே பறந்த அந்த விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்துவிட்டு, பறந்துசென்று விட்டன.
இரவு 10.45 மணிக்கு மீண்டும் காபூல் மேல் வட்டமிட்ட அமெரிக்க ஜெட் விமானங்கள் 2 குண்டுகளைப்போட்டன. அடுத்த 20 நிமிடங்களிலேயே மீண்டும் வந்த அந்த விமானங்கள் ஒரு குண்டைப் போட்டுவிட்டுமறைந்தன.
ஒவ்வொரு முறை அமெரிக்க விமானங்கள் வானில் தோன்றும் போதும், தலிபான் படையினர் விமான எதிர்ப்புபீரங்கிகள் மூலம் பதிலடி தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர்.
கடைசியாக இன்று அதிகாலை 4.45 மணிக்கு வந்த விமானங்கள் காபூல் நகர் மீது 2 குண்டுகளை வீசிவிட்டுமறைந்தன. இந்தத் தாக்குதல் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்தது.