கணவரை விட்டு காதலனை கைபிடித்த பெண்
ஆலந்தூர்:
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து காணாமல் போன பெண்ணை சேலத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால்அவர் கணவருடன் வாழ விருப்பமில்லை, காதலருடன்தான் வாழ விரும்புகிறேன் என்று நீதிமன்றத்தில் கூறியதால்காதலருடனேயே அனுப்பி வைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசித்த வருபவர் வீரப்பன் (வயது 48). இவரது மனைவி இந்திரா (38).குடும்பம் கஷ்டப்பட்டு வந்ததால் சம்பாதிப்பதற்காக சிங்கப்பூர் சென்றார் இந்திரா.
அங்குள்ள வேலை முடிந்துவிட்டதால் தான் சென்னை திரும்புவதாக கடந்த ஜுலை மாதம் தன் கணவருக்கு கடிதம்எழுதியிருந்தார் இந்திரா.
தன் மனைவியை அழைத்துச் செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆவலோடு காத்திருந்தார்வீரப்பன். சிங்கப்பூர் விமானம் வந்தது. ஆனால் அவர் மனைவிதான் வரவில்லை.
இதனால் கவலையடைந்த வீரப்பன் குறிப்பிட்ட தேதியில் தன் மனைவி வராத காரணத்தால் சிங்கப்பூருக்குதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த போது இந்திரா சென்னை திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து வீரப்பன் போலீசில் புகார் செய்தார். தன் மனைவி ரூ.1 லட்சம் பணத்துடனும், 40 சவரன் தங்கநகையுடன் சிங்கப்பூரிலிருந்து வந்ததாகவும், அவரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காணவில்லைஎன்றும் மீனம்பாக்கம் விமான நிலைய போலீசாரிடம் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையே இந்திரா சேலத்தில் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து,போலீசார் சேலம் சென்று இந்திராவையும், அவருடன் வசித்து வந்தவரையும் கைது செய்து சென்னை கொண்டுவந்தனர்.
போலீசார் இந்திராவிடம் விசாரணை செய்த போது தன் கணவருடன் தான் வாழ விரும்பவில்லை என்றும், தான்காதலித்தவருடன் விருப்பப்பட்டே வசித்து வருவதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்திராவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தன் கணவருடன் தான் வாழவிரும்பவில்லை. தன் காதலனுடன் தன்னை வாழ அனுமதிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு ஜலநாதனிடம்கேட்டுக் கொண்டார் இந்திரா.
இதையடுத்து இந்திராவை அவர் விரும்பிய படி அவரது காதலனுடன் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்மாஜிஸ்திரேட்டு.