For Quick Alerts
For Daily Alerts
Just In
அமெரிக்க தாக்குதலில் 35 காஷ்மீர் தீவிரவாதிகள் பலி
கராச்சி:
அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ள ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 35 பேர்காபூலில் நடந்த அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க விமானங்கள் காபூல் நகரின் மீது குண்டு மழை பொழிந்ததில் இந்ததீவிரவாதிகள் இருந்த வீடும் பயங்கரமாகத் தாக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 35 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாத இயக்கம் என்ற முத்திரையுடன் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது இந்தஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தீவிரவாத இயக்கங்கள்பட்டியலிலும் இந்த இயக்கம் இருக்கிறது.
Comments
Story first published: Wednesday, October 24, 2001, 5:30 [IST]