அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படவில்லை: முதல்வர்
மதுரை:
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்திய முஸ்லிம் மாணவ இயக்கத்தை (சிமி)சேர்ந்தவர்கள் கைது செயப்பட்ட போது அப்பாவி முஸ்லிம் மக்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) மதுரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போதுகூறியதாவது:
நாடு முழுவதும் சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட போதுதமிழகத்தில் சிமி இயக்கத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அந்தஇயக்கத்தில் இல்லாத யாரும் கைது செய்யப்படவில்லை.
முல்லை பெரியார் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தும்விஷயத்தில் கேரள அரசு காலம் கடத்தாது என்று நம்புகிறேன்.
இந்த விஷயத்தில் சுமுகமான முடிவு ஏற்பட கேரள முதல்வரை விரைவில் சந்துதபேச்சுவார்த்தை நடத்தவுளள்ளேன். சமீபத்தில் நான் டெல்லி சென்றிருந்த போது கூடகேரள நீர்வளத்துறை அமைச்சரிடம் இது குறித்து பேசினேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications