புதுவை: மெஜாரிட்டியை நிரூபிக்க ரங்கசாமிக்கு ஒரு மாதம் கெடு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரங்கசாமியின் தலைமையில் புதிய ஆட்சிஅமைப்பதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்தது. மேலும் ஒரு மாத காலத்திற்குள் சட்டசபையில் மெஜாரிட்டிபலத்தை நிருபிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் தனது தலைமையில் புதுவையில் ஆட்சி அமைக்க ஜனாதிபதியின் ஒப்புதலைக் கேட்டிருந்தார். இதற்கானஒப்புதல் கோரும் கடிதத்தை அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாண்டிச்சேரி துணை நிலைய ஆளுநர் ரஜனிராயிடம் கொடுத்தார்.
அந்தக் கடிதம் இன்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் முன்பு வந்தது. அவர் புதுவையில் ரங்கசாமி தலைமையில்புதிய ஆட்சி அமைப்பதற்கு அங்கீகாரம் அளித்துவிட்டார். மேலும் ஒரு மாதகாலத்திற்குள் ரங்கசாமி சட்டசபையில்மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக புதுவை முன்னாள் முதல்வர் சண்முகம் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.சண்முகத்தின் ராஜினாமாவையும், ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை இடைக்காலமுதல்வராகப் பணியாற்றும்படி சண்முகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ரங்கசாமி நேற்று இரவு டெல்லிக்குச் சென்று அகில இந்திய காங்கிரஸ்தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து பாண்டிச்சேரியில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவை குறித்துஆலோசனை நடத்திவருகிறார்.
புதிய அமைச்சரவையில் பங்கேற்கவிருக்கும் அமைச்சர்கள் குறித்து இன்றும் முடிவு செய்யயப்படவில்லை என்றுரங்கசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications