நாகர்கோவிலில் தப்பிய கைதி சென்னையில் கைது
நாகர்கோவில்:
10 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளியாகி தப்பி ஒடிய ரவுடியை சென்னையில் கைதுசெய்தனர் போலீசார்.
நாகர்கோவிலில் சண்முகம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரண்டு பேரை கொன்றது தொடர்பாக நாகேந்திரன்என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்4ஆண்டு காலத்தை சிறையில் கழித்தார்.
தினமும் காலையில் நாகர்கோவில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் அவர் சில தினங்களுக்கு முன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சில தினங்கள் மட்டுமே நல்ல பிள்ளையாக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்த நாகேந்திரன், இருதினங்களுக்கு முன் திடீரென தலைமறைவாகி விட்டார். இவர் தன் நண்பனுடன் தப்பி தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வியாசர்பாடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வரும் வாகனம் அனைத்தையும் அவர்கள் சோதனை செய்து வந்தனர்.
அப்போது நாகேந்திரனும், அவரது நண்பரும் அந்த பகுதி வழியாக காரில் வந்தனர். அவர்கள் வந்த காரைசோதனைக்காக போலீசார் நிறுத்த முயன்ற போது அந்த கார் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டது.
போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போதும் கார் நிற்கவில்லை. இதையடுத்து காரைநிறுத்துவதற்காக காரின் டயரை நோக்கி சுட்டனர் போலீசார். துப்பாக்கி குண்டு துளைத்து காரின் டயர் வெடித்துகார் நின்றுவிட்டது.
இதையடுத்து, காரில் வந்த நாகேந்திரனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும்நாகர்கோவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications