For Daily Alerts
Just In
திமுக, அதிமுக, காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை - சுவாமி
சென்னை:
தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களிடையேஆதரவு குறைந்துவிட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இன்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பது போன்ற கோஷங்களெல்லாம் இனி மக்களிடம் எடுபடாது. தேர்தலுக்குதேர்தல் மக்கள் தீர்ப்பு கட்டாயம் மாறுபடும்.
மூன்றாவது அணி அமைக்கிறோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் தலைமையிலான ஒரு அணி வந்தது.அந்த அணியையும் மக்கள் ஓரங்கட்டி விட்டனர்.
முன்றாவது அணிக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருக்காது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடைய ஜனதா கட்சி நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது என்றார்சுவாமி.
Comments
Story first published: Wednesday, October 24, 2001, 5:30 [IST]