பொதுமக்கள் மத்தியில் தலிபான் படையினர் - புதிய போர் தந்திரம்
காபூல்:
ஆப்கானிஸ்தானைத் தாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் தலிபான் படையினர் புதிய போர் தந்திரத்தைமேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.
தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஏற்கனவே அமெரிக்கா மீதுகுற்றச்சாட்டு இருக்கிறது.
காண்டஹார் அருகே அமெரிக்க விமானங்களால் வீசப்பட்ட ஒரு குண்டு, தவறுதலாக ஒரு கிராமத்தில் விழுந்துவெடித்ததில் அக்கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் பல இடங்களிலும் ஆப்கானிய மக்கள் அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டு வருகின்றனர் என்றுதலிபான்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதையே தலிபான்கள் தற்போது தங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அமெரிக்கா குண்டு வீசாது என்பதால், அப்பகுதிகளில் தங்கள்படையினரை ஊடுருவ விட்டுள்ளனர் தலிபான்கள். இதன் மூலம் எளிதாக அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தமுடியும் என்றும் தலிபான்கள் நம்புகின்றனர்.
தலிபான்களின் இந்த புதிய போர் தந்திரம் பலிக்குமா?