பாமகவை சேர்த்ததால் திமுகவுக்கு தோல்வி - திருமாவளவன்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் சேர்த்ததால்தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததுஎன்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கியக்காரணம் பாமகவை திமுக கூட்டணியில் சேர்த்ததுதான்.
பாமக ஒப்புக்குத்தான் கூட்டணியில் இருந்தது. உண்மையிலேயே கூட்டணியின் வெற்றிக்காக அந்தக் கட்சிபாடுபடவில்லை.
மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல இடங்களில் தலித்கள் வாக்களிக்கஅனுமதிக்கப்பபடவில்லை. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற குற்றங்கள் இன்னமும் நடப்பது வேதனைக்குரியது.
தேர்தல் நேரங்களில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும்.இந்தப் புதிய முறையைச் செயல்படுத்தினால் தேர்தல் நேரங்களில் குற்றங்கள், வன்முறைகள் தடுக்கப்படும்.
காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தது மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். இதனால்அந்த அணியாலும் வெற்றி பெற முடியவில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.