ரகசிய விமான தளம் கட்டும் நார்த்தர்ன் அலையன்ஸ்
காபூல்:
நார்த்தர்ன் அலையன்சுக்கு உதவும் வகையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் மீது அமெரிக்க நேற்றிரவும்இன்றும் தொடர் தாக்குதல் நடத்தியது. இப்போதும் விமானத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
இத் தாக்குதலைப் பயன்படுத்தி நார்ததர்ன் அலையன்ஸ் படையினர் தலைநகர் காபூலை நெருங்கிவிட்டனர்.
ஆனால், இப்போதைக்கு காபூல் மீது தாக்குதல் ஏதும் நடத்த வேண்டாம் என நார்த்தர்ன் அலையன்சிடம்அமெரிக்கா கூறியுள்ளது.
இதனால் காபூலை நெருங்கிவிட்டாலும் அந்தப் படையினர் அந் நகரைத் தாக்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.பாதுகாப்புக்காக மட்டுமே எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ரகசிய விமான தளம் அமைப்பு:
இதற்கிடையே தலிபான்கள் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்க விமானங்கள் காபூல் அருகே இறங்கும்வகையில் ஒரு ரகசிய விமானத் தளத்தை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் அமைத்து வருகின்றனர். காபூலில்இருந்து 40 கி.மீ. தொலைவில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாஞ்ச்ஷேர் வேலியில் இந்த விமானத் தளம்கட்டப்பட்டு வருகிறது.
மஷார்-ஏ-ஷெரீபில் உள்ள விமானத் தளம் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆனால், இந்தவிமானத் தளத்தை ஒட்டியுள்ள மலைகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தத் தளத்தை நோக்கிதலிபான்கள் தினந்தோறும் குண்டுமழை பொழித்து வருகின்றனர். இதனால், விமானங்களை இங்கே இயக்கமுடியாத நிலைக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்போது கட்டப்பட்டு வரும் விமானத் தளம் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி நார்த்தர்ன் அலையன்சுக்கே மிகப்பெரிய உதவியாக அமையும்.
மேலும் உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தானில் இருந்து பாஞ்ச்ஷேர் வேலிக்கு வரும் இரு சாலைகளையும் சிலமாதங்களில் பனி மூடிவிடும். இதனால், அவசரமாக இந்த விமானத் தளத்தை நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டிவருகிறது.
தலிபான்கள் தாக்கலாம் என்பதால் இந்த இடம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
உணவில் விஷம்:
இந் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் சரக்கு விமானங்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் உணவுப்பொட்டலங்களையும் போட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பொட்டலங்களில் தலிபான்கள் விஷத்தைக் கலக்கமுயற்சி செய்து வருவதாக பென்டகன் கூறியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவின் பெயரைக் கெடுக்க முயற்சி நடப்பதாக பென்டகன் கருதுகிறது.