ஐரோப்பாவிலிருந்து ஆப்கானுக்கு தப்பிய அட்டாவின் கூட்டாளிகள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லமாபாத்:

அமெரிக்கா மீது விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதியானமுகம்மது அட்டாவின் கூட்டாளிகள் 3 பேர் இந்தத் தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த இவர்கள் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.பாகிஸ்தான் வந்த இவர்கள் உடனடியாக ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி விட்டனர்.

இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில்,

ஜெர்மனியில் வசித்து வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த பாஹாஜி, பெல்ஜியத்தில் வசித்துவந்த அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஹுசைனி மற்றும் பிரான்ஸ் நாட்சில் வசித்து வந்தஅன்மார் மவுலா ஆகிய மூவரும் செப்டம்பர் 4ம் தேதி கராச்சி வந்தனர்.

அவர்கள் ஹாம்பர்கிலிருந்து வரும் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக கராச்சி வந்துஅங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

ஹோட்டலின் அருகிலுள்ள பொது தொலைபேசி நிலையத்திலிருந்து ஹாம்பர்க்குக்குதொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

மறுதினமே மூவரும் பாகிஸ்தானின் தென்மேற்கு நகரான குவாட்டாக்கு வந்து அங்கிருந்துஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுள்ளனர் என்று கூறினர்.

இவர்கள் ஆப்கானுக்குள் நுழைந்த ஒரு வாரத்தில் முகம்மத் அட்டா அமெரிக்காவில் தனதுகூட்டாளிகள் 10 பேரின் உதவியுடன் 4 விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தினான்.

இந்த மூவரும் பின் லேடனின் அல்-காய்தா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்என்று தெரிகிறது. அமெரிக்காவில் தாக்குதல் நடந்த பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்துதப்புவது கடினமாகிவிடும் என்பதால் இவர்கள் முன்னதாகவே தப்பி ஆப்கானிஸ்தானில்தஞ்சம் புகுந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+