For Daily Alerts
Just In
கோடாலிகளுடன் ஆப்கான் செல்லும் பாக். ஆதிவாசிகள்
இஸ்லாமாபாத்:
தலிபான்களுடன் சேர்ந்து போராடுவதற்காக ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஆதிவாசிகள் எல்லையில் வாள்,கோடாலி, துப்பாக்கிகளுடன் குவிந்து வருகின்றனர்.
ஆதிவாசிகள் நிறைந்த திர் மாவட்டத்தில் இவர்கள் கூடி வருகின்றனர். இதுவரை சுமார் 3,000 ஆதிவாசிகள்சமார்பாக் பகுதியில் குவிந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் மலகண்ட் பகுதியில் இருந்து இங்கு வந்துகொண்டுள்ளனர் என மாவட்ட அதிகாரி குலாம் பரூக் கூறினார்.
இவர்களில் 2,500 பேரிடம் ஏ.கே.-47 உள்ளிட்ட ஆட்டோமேடிக் துப்பாக்கிகள் உள்ளன. பிறர் வாள்களையும்கோடாலிகளையும் ஏந்திக் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இவர்களை எப்படி தடுப்பது என்று தெரியாமல் போலீசார் தடுமாறி வருகின்றனர். இதையடுத்து ராணுவத்தினரைபாகிஸ்தான் குவித்து வருகிறது.
Comments
Story first published: Thursday, October 25, 2001, 5:30 [IST]