டீக்கடைக்குள் ஜீப் ஓட்டி 2 பேரைக் கொன்ற இன்ஸ்பெக்டர்
கோயம்புத்தூர்:
உடுமலைப்பேட்டை அருகே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது ஜீப்பை படுவேகமாக ஓட்டிச் சென்றுடீக்கடைக்குள் புகுந்து வெளியே வந்தார். இதில் கடைக்குள் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். அந்த இன்ஸ்பெக்டர்சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப்பணிபுரியும் ஒருவர் அவருக்கு வழங்கப்பட்ட ஜீப்பை எடுத்துக் கொண்டு சென்றார்.
அவர் தனது ஜீப்பை மிகவேகமாக ஓட்டிச் சென்றுகொண்ருந்தார். பொன்னேரி அருகே அவரது கட்டுப்பட்டையும்மீறி ஜீப் ஒரு டீக்கடைக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் 2 பேர் அதே இடத்தில் மரணமடைந்தனர். மேலும் 4பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஜீப்பை ஓட்டி வந்த இன்ஸ்பெக்டருக்கும் தலையில் பெரிய காயம் ஏற்பட்டு, அவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேற்று மருத்துவமனையில் சஸ்பென்சன் ஆர்டர் வழங்கப்பட்டது. மேலும் போலீசார் அவர் மீதுவழக்குப் பதிவு செய் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அந்த இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பொன்னேரி கிராமத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications