For Daily Alerts
Just In
திமுக எம்.பி. மீது கொலை முயற்சி வழக்கு
சென்னை:
சென்னை தரமணி சென்டிரல் பாலிடெக்னிக் வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்குகள்எண்ணப்பட்டபோது நடந்த தேர்தல் தகராறு தொடர்பாக திமுக எம்.பி. குப்புசாமி உள்ளிட்ட9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரல் பாலிடெக்னிக் மையத்தில் மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு கும்பல்மையத்திற்குள் புகுந்து வாக்குச் சீட்டுக்களைக் கைப்பற்ற முயன்றது. இதையடுத்துபோலீஸார் தலையிட்டு அக்கும்பலை வெளியே விரட்டினர். அதன் பின்னர்வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலர் மையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தரமணி மையத்தில் அப்போது இருந்த திமுக எம்.பி குப்புசாமி, செயலாளர்தணசேகரன் உள்ளிட்ட 9 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, October 25, 2001, 5:30 [IST]