நாகர்கோயிலில் ஒருவர் கைது- தலிபான் ஆதரவாளரா?
நாகர்கோயில்:
எனக்கு தலிபான் என்றால் உயிர், நான் வெடிகுண்டு வைக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தவரைபோலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ்ஸ்டாண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.30 மணியளவில் ஒரு நடுத்தர வயதுஆள் நின்றுகொண்டிருந்தார்.
அவர் பஸ்நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் எனக்குத் தலிபான் என்றால் உயிர், நான் ஒரு இடத்தில்குண்டுவைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்கள் மிரண்டுபோய் போலீசுக்குத் தகவல்கொடுத்தனர்.
உடனே கோட்டார் போலீசார், இன்ஸ்பெக்டர் ஜூட் துரைப்பாண்டியன் தலைமையில் பஸ்நிலையத்திற்கு வந்துகுண்டு வைக்கப் போவதாக மிரட்டியவனைப் பிடித்தனர்.
பிறகு அவரை விசாரித்ததில் அவர் பெயர் நசீம்உலர் என்றும் கோட்டார் அருகே உள்ள இடலாக்குடியைச்சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. மேலும் அவரிடம் கேமரா ஒன்றும், தீவிரவாதம் தொடர்புடைய புத்தகம்ஒன்றும் இருந்தது.
இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications