நல்லவர்களை கவிழ்க்க நினைக்கும் சதிகாரக் கும்பல்- பன்னீர் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களையும், நல்லாட்சி நடத்தும் நல்வர்களையும் கவிழ்ப்பதற்கு எப்போதும்ஒரு சதிகாரக் கும்பல் காத்திருக்கிறது என்று சிவகங்கையில் நடைபெற்ற மருதுபாண்டியர் விழாவில் முதல்வர்பன்னீர் செல்வம் பேசினார்.

சிவகங்கைச் சீமையை ஆண்டு, வெள்ளையர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய மன்னர்கள் மருது சகோதரர்கள்,வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். நேற்று (புதன்கிழமை) 24ம் தேதியுடன் அவர்கள்தூக்கிலிடபட்டு 200 ஆண்டுகள் முடிவடைகிறது.

அதற்கான விழா அரசு சாரபில் சிவகங்கையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் பன்னீர் செல்வம், தமிழகசட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்து, அமைச்சர்கள் துரைராஜ், நயினார் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது,

வீரமங்கை வேலுநாச்சியாரின் ஒப்பற்ற தளபதிகளாக இருந்து, பின் சிவகங்கை சீமையை ஆட்சி செய்தமருதுபாண்டிய மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.

ஆட்சித்திறம், அறிவாற்றல் மற்றும் தமிழ்ப்பற்றால் மக்களைக் கவர்ந்து, மக்களின் நன்மதிப்பைப் பெற்று சிறப்பானமுறையில் ஆட்சி செய்தார்கள்.

இதற்கு அப்போதைய வெள்ளையர்களின் அரசு எதிர்ப்புத் தெரிவித்து, மருதுபாண்டியர்களை ஆட்சியிலிருந்துஇறக்க சதிவேலை செய்தது.

இதுபோன்ற சதிகாரக் கூட்டம் இப்போதும் தமிழகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று , மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நல்லாட்சி நடத்திவந்தநல்லவர்களைக் கீழிறக்க ஒரு கூட்டம் சதிவேலை செய்து வருகிறது.

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும் என்பார்கள். அதை மீண்டும் ஒருமுறைநிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தலைமையில் விரைவில் பொற்கால ஆட்சிதொடரும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+