அபு சலீம் ஷார்ஜாவில் கைது: மும்பை போலீஸ் விரைவு
ஷார்ஜா:
தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியான அபு சலீம் நேற்று (புதன்கிழமை) ஷார்ஜாவில் கைதுசெய்யப்பட்டான். இதையடுத்து மும்பை போலீசார் ஷார்ஜா விரைகின்றனர்.
மும்பை குண்டு வெடிப்பு, இசையமைப்பாளர் குல்ஷன் குமார் படுகொலை, கடத்தல், பணம் பறித்தல், கொலைகளில்தொடர்புடையவன் அபு சலீம். மொத்தம் இவன் மீது 35 கொலை வழக்குகள் உள்ளன.
தாவூத் இப்ராகிமுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவன், 1998ம் ஆண்டு முதல் தனியாக செயல்பட்டுவருகிறான். நைரோபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறான்.
இவனது முன்னாள் தலைவனான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். அபு சலீம் தனதுதலைமையகத்தை நைரோபியில் வைத்திருந்தாலும் ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.ஈ.) சுற்றி வந்தான்.இருவரையுமே கைது செய்யுமாறு பாகிஸ்தானிடமும் ஐக்கிய அரபு நாடுகளிடமும் பலமுறை இந்தியா கேட்டுக்கொண்டது.
ஆனால், இதை இந்த நாடுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக உலகம்தழுவிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இனடர்போலின் உத்தரவின்பேரில் யு.எ.ஈ. போலீசார்அபு சலீமை கைது செய்துள்ளனர்.
இத் தகவலை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் சகன் புஜ்பால் உறுதி செய்தார். ஆனால், டெல்லியில் அதிகாரிகள்இதை உறுதி செய்யவில்லை. கடந்த புதன்கிழமை யு.எ.ஈ. அரசிடமிருந்து மும்பை மாநில போலீசாருக்கு ஒருகோரிக்கை வந்தது. அபு சலீமின் கைரேகைகள் வேண்டும் என யு.எ.ஈ. போலீசார் கோரியிருந்தனர். ஆனால், வேறுதகவல் எதையும் தரவில்லை.
இதையடுத்து அபு சலீம் அங்கு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என மும்பை போலீசார் கருதுகின்றனர்.பிடிபட்டவன் அபு சலீம் தானா என்பதை உறுதி செய்யவே கைரேகையை யு.எ.ஈ. கோருவதாக போலீசார்கருதுகின்றனர்.
அபு சலீமை எப்படியாவது இந்தியாவுக்குக் கொண்டு வரவும் மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காகஇன்டர்போலை தொடர்பு கொண்டுள்ளனர். அது அவ்வளவு எளிதில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் இவனது குரு தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசே பாதுகாப்பு அளித்து வருகிறது. அவன்பாகிஸ்தானின் முக்கிய வங்கிக்கே கடன் கொடுத்து உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மும்பை போலீஸ் விரைவு:
அபுசலீம் கைது செய்யப்பட்டதையடுத்து மும்பை போலீசார் அவனது கைரேகையுடன் யு.எ.ஈக்கு விரைகின்றனர்.












Click it and Unblock the Notifications